பல்லவி
ஏமேமோ தெலியக பலிகெத3ரு செலுலார
நா மீத3 த3ய லேக
சரணம்
சரணம் 1
முனு மந்த3ர கி3ரி முனுக3 1கூர்மமை
வீபுன 2தால்சக3 லேதா3 (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/-ஏமோ/ தெலியக/ பலிகெத3ரு/ செலுலார/
ஏது/ ஏதோ/ அறியாது/ பேசுகின்றீர்/ பெண்டிரே/
நா/ மீத3/ த3ய/ லேக/
என்/ மீது/ கருணை/ யின்றி/
சரணம்
சரணம் 1
முனு/ மந்த3ர/ கி3ரி/ முனுக3/ கூர்மமை/
முன்பு/ மந்தர/ மலை/ (நீரில்) மூழ்க/ ஆமையாகி/
வீபுன/ தால்சக3 லேதா3/ (ஏ)
முதுகின்மீது/ சுமக்கவில்லையா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தால்சக3 லேதா3 - தால்சக3 லேதா3 செலுலார.
Top
மேற்கோள்கள்
1 - கூர்மமை - ஆமையாகி - பாகவத புராணம் 8.7 நோக்கவும்.
3 - கரி ராஜு - கரி யரசன் - பாகவத புராணம் 8.4 நோக்கவும்.
5 - ஸோமகுனி - சோமகன் - பாகவத புராணத்தினில் (8-வது புத்தகம், 24-வது அத்தியாயம்), 'ஹயக்3ரீவ' (குதிரைத்தலை) அசுரன், மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், மீனாக அவதரித்து, அவ்வசுரனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிலேயே, மறைகளைக் கவர்ந்து சென்றது, 'சோமகாசுரன்' என்றும் கூறப்பட்டுள்ளது.
அப்புராணத்திலேயே, (5-வது புத்தகம், 18-வது அத்தியாயம்), ஓர் அசுரன் மறைகளைக் கவர்ந்து சென்றதாகவும், இறைவன், ஹயக்3ரீவராக அவதரித்து அவனைக் கொன்று, மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.
Top
ஸ்ரீ வேங்கடேஸ்வர அஷ்டோத்தரத்தில், மது4, கைடப4 என்ற மறைகளைக் கவர்ந்த அசுரர்களைக் கொன்று, இறைவனாகிய, ஹயக்3ரீவர் மறைகளை மீட்டதாகக் கூறப்படும்.
எனவே, மறைகளைக் கவர்ந்தது, ஹயக்3ரீவரா, சோமகாசுரனா அல்லது மது4, கைடப4னா என விளங்கவில்லை. அதுபோன்றே, அசுரனைக் கொன்று, மறைகளை மீட்டது, இறைவனின், மீன் அவதாரத்தினிலா, அல்லது ஹயக்3ரீவ அவதாரத்தினிலா, என்பதும் விளங்கவில்லை. இது குறித்து, முரண்பாடுகள் இருப்பதனால், தாமே இதனைக் குறித்து முடிவு செய்யும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
6 - காளிந்தி3 - காளிந்தி நதியில் - பாகவத புராணம் 10.16 நோக்கவும்.
7 - கு3ரு புத்ருனி - குரு மைந்தனை - பாகவத புராணம் 10.45 நோக்கவும்.
பாகவத புராணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு
Top
விளக்கம்
4 - வெரவக - அச்சமின்றி - இது சோமகனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆனால், கண்ணன் இங்கு, தனது பிரதாபங்களைக் கூறுவதனால், இது கண்ணனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது.
இப்பாடல், 'நௌக சரித்ரம்' 'ஓடக்கதை' எனப்படும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
பாடலின் பின்னணி - கோபியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, எல்லோருமாக, ஓடத்தில் பயணம் செய்ய எண்ணுகின்றனர். ஓடத்தினைச் செலுத்துதல், பெண்களால் இயலாது என்று கண்ணன் உரைக்க, அதனைக் கேட்டு, கண்ணன், ஏதோ சூது செய்வதாக கோபியர் எண்ணுகின்றனர். ஆய்ச்சியர், கண்ணனை நம்பாது, அவனுடைய பல குறும்புகளை விவரிக்கின்றனர்.இப்பாடலில், கண்ணன் தனது பிரதாபங்களை வருணித்து, கோபியர், தன்னைப் பற்றி அறியாது பேசுகின்றனர் என்கின்றான்.
Top